thenakam.live

Daily News

Advertisement

“நானே இப்போதும் ஜனாதிபதி”: குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் மதுரோ

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, தான் தொடர்ந்தும் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதாகத் தெரிவித்து, போதைப்பொருள் கடத்தல் உட்பட தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார். 

நியூயோர்க் நகர நீதிமன்றமொன்றில் முதன்முறையாக முன்னிலையான போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அங்கு கருத்துத் தெரிவித்த மதுரோ, அமெரிக்காவினால் சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய பாரதூரமான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரிப்பதாகத் தெரிவித்தார். 

நீதிமன்றில் கருத்துத் தெரிவிக்கையில், “நான் இப்போதும் வெனிசுலாவின் ஜனாதிபதியாவேன்” என மதுரோ வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *